Monday, 18 February 2013

. ஐந்தெழுத்து என்பது ந-ம-சி-வ-ய என்ற ஐந்துமாகும்.

. ஐந்தெழுத்து என்பது ந-ம-சி-வ-ய என்ற 


ஐந்துமாகும்.



எண்களைப் பயன்படுத்திக் கருத்துகளை விளக்குவதும் செய்திகளை விளக்குவதும் சித்தர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. கீழ்வரும் சிவவாக்கியர் பாடலைக் கவனியுங்கள்.


அஞ்செழுத்திலே(1) பிறந்து அஞ்செழுத்திலே(2) வளர்ந்து
அஞ்செழுத்திதை(3) ஓதுகின்ற பஞ்ச(4)பூத பாவிகாள்
அஞ்செழுத்தில்(5) ஓரெழுத்தை அறிந்துகூற வல்லிரேல்
அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (பா.20)

இந்தப்பாடலில் ஐந்து (அஞ்சு) என்ற எண் ஐந்து முறை இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பொருள்களில் வந்திருக்கிறது. முதலாவது “அஞ்சுக்கு” ஐந்து புலன்கள் அல்லது ஐந்து கோசங்கள் என்று பொருள். இரண்டாவது “அஞ்சுக்கு” ஐந்து பிராணன்கள் என்று பொருள். மூன்றாவது “அஞ்சுக்கும்” ஐந்தாவது “அஞ்சுக்கும்” ஐந்தெழுத்து மந்திரமான பஞ்சாட்சரம் என்று பொருள். நான்காவது “அஞ்சுக்கு” ஐந்து பூதங்கள் என்று பொருள். ஐந்தெழுத்தையும் ஐம்பதெழுத்தையும் சமம் என்கிறார் திருமூலர். (மந்திரம்.2698) இதில் ஐம்பது என்பது குண்டலினி ஆற்றல் பலவேறு சக்கரங்களைக் கடக்கும்போது கேட்கிற பல்வேறு ஒலிகள் ஆகும். இந்த ஐம்பது ஒலிகளும் ஐம்பது எழுத்துகளாகும். ஐந்தெழுத்து என்பது ந-ம-சி-வ-ய என்ற ஐந்துமாகும்.


No comments:

Post a Comment