Saturday, 20 July 2013

ஓம்

ஓம்

அறிவோம் உனை

ஆய்வோம் எமை

இருத்துவோம் இதயத்துள் உமை

ஈவோம் பிறர்க்கு உணவை

உய்வோம் இப்புவியில்

ஊர்ந்தோம் கருவில்

என்போம் கடவுள் ஒன்றே என்போம்

ஏற்போம் ஆதியும் அந்தமுமாய் உம்மை

ஐயுறோம் உன் அருளில் எப்போதும்

ஒவ்வோம் ஒருவரையும் உனக்கு நிகராய்

ஓம் ஓமென்பதே என் மூச்சாம்

ஔவை கண்ட என் தமிழ் தெய்வம் நீயாம்

ஃ என்று தும்மினாலும் டக்கென்று வந்து நிற்பவன் நீதானே

கந்தா கடம்பா கதிர்வேலா !!!!

No comments:

Post a Comment